sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி

/

2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி

2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி

2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி


ADDED : மே 28, 2024 12:41 AM

Google News

ADDED : மே 28, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;கொடுவாய் அருகே இரு பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக், 23; தொங்குட்டிபாளையம் ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்த மணி மகன் சந்துரு, 22; கூலித் தொழிலாளர்கள்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு காஸ் சிலிண்டர் எடுத்து செல்ல, அவிநாசிபாளையத்திலிருந்து கொடுவாய் நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர். தாராபுரம் ரோடு, கொடுவாய் - செங்காட்டுப் பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் கார்த்திக், சந்துரு ஆகியோர் பலத்த காயமுற்று அதேயிடத்தில் உயிரிழந்தனர்.

மற்றொரு பைக்கில் வந்த பல்லடம், நாராணா புரம் - மகாலட்சுமி நகரைச் சேர்ந்த வீரராகவன், 44 என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us