sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அகற்றப்படாத அறிவிப்பு பலகை

/

அகற்றப்படாத அறிவிப்பு பலகை

அகற்றப்படாத அறிவிப்பு பலகை

அகற்றப்படாத அறிவிப்பு பலகை


ADDED : மே 24, 2024 12:00 AM

Google News

ADDED : மே 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:குடிநீர் குழாய் சீரமைப்பு பணி காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு பலகை அகற்றப்படாததால், தாராபுரம் ரோடு வழியாக, நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே துவங்கி, தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் வரை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்காக காங்கயம் ரோட்டில் வரும் வாகனங்கள், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

மே, 11 முதல், 14 வரை நான்கு நாட்களுக்கு பணி நடந்த இடத்தில் போக்கு வரத்து தடைவிதிக்கப்பட்ட நிலையில், பணி முழுமையாக முடிந்து, 16ம் தேதி போக்குவரத்துக்காக சாலை திறக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் உஷா தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் நோக்கி பயணித்து வருகிறது.

ஆனால், போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போலீசார் சார்பில், ஆங்காங்கே வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்படவில்லை. குறிப்பாக, தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு, 60 அடி ரோடு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு அகற்றப்படாததால், புதிதாக நகருக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, அறிவிப்பு பலகையை உடனே அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us