sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : செப் 06, 2024 02:30 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை நகர வீதியில், பாதாள சாக்கடை பணிகளுக்கு குழி தோண்டப்பட்டு, மீண்டும் சீரமைக்காமல் விட்டுள்ளதால், விபத்து ஏற்படுகிறது.

உடுமலை நகரிலுள்ள பசுபதி வீதியில், பாதாளச்சாக்கடை குழிகளில் அடைப்பு ஏற்பட்டதையொட்டி, ரோடு தோண்டப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பஸ் ஸ்டாண்டிலிருந்து தளி ரோடு செல்வதற்கு, பசுபதி வீதி பிரதான சாலையாக இருப்பதால், அவ்வழியாக நாள்தோறும் அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. வணிக கடைகள் இருப்பதால், சரக்கு வாகனங்களும் அதிகளவில் அப்பகுதியை பயன்படுத்துகின்றன.

இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோட்டில் பெரிய குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து பத்து நாட்களாகியும், ரோடு சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியில் பெரிய பள்ளமாக மாறியுள்ளது.

இரவு நேரங்களில், அடிக்கடி வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். சரக்கு வாகனங்கள் பள்ளத்தை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளத்தை சீரமைத்து, ரோட்டை சமன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us