sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்

/

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்

1


ADDED : மார் 07, 2025 03:45 AM

Google News

ADDED : மார் 07, 2025 03:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நடத்திய தொடர் காத்திருப்பு போராட்டத்தால், திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக வருவாய்த்துறை சார்ந்த சான்று வழங்கும் பணிகள் முடங்கின.

திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. ஐந்து தாலுகாவை உள்ளடக்கிய திருப்பூர் வருவாய் கோட்டத்தில், 12 குரூப் கிராமங்கள் உள்ளன. திருப்பூர் தெற்கு தாலுகாவில் மட்டும், 4 குரூப் கிராமங்கள் உள்ளன. தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட தொங்குட்டிபாளையம் பிரதான கிராமத்தில், கரட்டுப்பாளையம் குரூப் கிராமமாக இயங்கி வருகிறது.

கரட்டுப்பாளையத்துக்கு வி.ஏ.ஓ., வாக விஸ்வநாதன் சமீபத்தில் பணியிடமாறுதல் பெற்றுவந்தார். அவருக்கு, தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ., விஜயராகவன், ஆன்லைன் சான்று வழங்குவதற்கான யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்க மறுத்துள்ளார். கரட்டுப்பாளையம் பணிகளையும் தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ.,வே கவனித்து வருவதாகவும்; வி.ஏ.ஓ., விஸ்வநாதனுக்கு பிரத்யேக யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்க கோரியும், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், போராட்டத்தில் இறங்கினர்.

அச்சங்கத்தினர் உறுப்பினராக உள்ளவர்களின் நான்கு பெண் வி.ஏ.ஓ.,க்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், திருப்பூர் - குமரன் ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். அவர்களிடம் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால், இரவு பகலாக நேற்றும் 60க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், மாவட்டம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு நாட்களாக, பட்டா மாறுதல், வருவாய், பிறப்பு - இறப்பு சான்று வழங்கல் உள்ளிட்ட பணிகள் முடங்கின.

இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் மற்றும் தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ., விஜயராகவன் சார்ந்துள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாலை, 5:30 மணி வரை பேச்சுவார்த்தை முடிவடையாதநிலையில், வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பகிர வேண்டிய கட்டாயம் இல்லை

தொங்குட்டிபாளையத்தில், கரட்டுப்பாளையம் குரூப் கிராமமாக உள்ளது. அரசு எனக்கு வழங்கிய யூசர் நேம் - பாஸ்வேர்டை, கரட்டுப்பாளையம் வி.ஏ.ஓ., கேட்கிறார். பட்டா மாறுதல் போன்றவற்றில் தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன். அவர் சில மாதங்களில் பணி ஓய்வில் செல்ல உள்ளார். அதற்குள், எனது யூசர் நேம் - பாஸ்வேர்டு பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால், நான் தான் குற்றவாளியாக்கப்படுவேன். அரசு எனக்கு வழங்கிய யூசர் நேம் - பாஸ்வேர்டை, வேறுநபருக்கு பகிரவேண்டிய கட்டாயமும் இல்லை.- விஜயராகவன் தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ.,



பகிர மறுப்பது முறையாகாது

தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ., தனது பாஸ்வேர்டை வழங்காமல், கரட்டுப்பாளையம் குரூப் கிராமம் சார்ந்த பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றுகளை அவரே சுயமாக வழங்கி வருகிறார். இதில் தவறு நடந்தால், வி.ஏ.ஓ.,வான விஸ்வநாதனே குற்றவாளியாகும் சூழல் ஏற்படும். எந்த வகையிலும், தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ.,வுக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசு தரப்பில் கரட்டுப்பாளையத்துக்கு பிரத்யேக யூசர் நேம் - பாஸ்வேர்டு உருவாக்கி கொடுக்க 15 நாட்களுக்கு மேலாகும். அதுவரை, யூசர் நேம் - பாஸ்வேர்டு வழங்க மறுப்பது முறையாகாது. - பிரபு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில செயலாளர்








      Dinamalar
      Follow us