sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

/

மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூன் 26, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : புதுப்பாளையம் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் ஒரு பகுதியை பிரித்து திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

தற்போது புதுப்பாளையம் ஊராட்சியில் கிடைக்கும் கிராம அடிப்படை வசதிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், கிராமப்புற ஊராட்சியாக இருப்பதால் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெறுகின்றனர்.

மேலும் பத்திரப்பதிவு அலுவலகம், கலைக்கல்லுாரி, கோர்ட் என அனைத்தும் அவிநாசியை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது திருப்பூர் மாநகராட்சியுடன் இணைத்தால் புதுப்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது உறுதி.

எனவே புதுப்பாளையம் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறும், புதுப்பாளையம் ஊராட்சியை கிராம ஊராட்சியாக தொடர வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us