/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் திருட்டு; விவசாயிகள் புகார்
/
தண்ணீர் திருட்டு; விவசாயிகள் புகார்
ADDED : ஜூன் 27, 2024 11:04 PM

திருப்பூர்: மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துார் ஊராட்சி தலைவர் கமலவேணி, விவசாய சங்கத்தினருடன் வந்து, கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், மிடாப்பாடியை சேர்ந்த அ.தி.மு.க.,வினர், எவ்வித அனுமதியும் பெறாமல், மடத்துக்குளம் தாலுகா, கடத்துார் கிராமத்தில், அமராவதி ஆற்றுப்படுகையில் கிணறு வெட்டியுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் என்ற பெயரில், முறையான அரசு அனுமதி பெறாமல், கிணறு வெட்டி, பைப்லைன் அமைத்து, திண்டுக்கல்லில் உள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கும், மட்டை மில் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் திருடி வருகின்றனர்.
அமராவதி ஆற்றிலும் இதுபோல் தண்ணீர் திருடுவதால், மடத்துக்குளம் ஒன்றிய பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் குடிநீராதாரம் பாதிக்கப்படுகிறது.
கடத்துார் பகுதி விவசாயிகள், பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். தண்ணீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.