sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராம நுாலகங்களுக்கு விடிவுகாலம் எப்போது? கட்டடங்களும் பாழாகும் அவலம் 

/

கிராம நுாலகங்களுக்கு விடிவுகாலம் எப்போது? கட்டடங்களும் பாழாகும் அவலம் 

கிராம நுாலகங்களுக்கு விடிவுகாலம் எப்போது? கட்டடங்களும் பாழாகும் அவலம் 

கிராம நுாலகங்களுக்கு விடிவுகாலம் எப்போது? கட்டடங்களும் பாழாகும் அவலம் 


ADDED : ஜூலை 16, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;கிராமங்களில், பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும், அண்ணா மறுமலர்ச்சித்திட்ட நுாலக கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன; நுாலக ஆணைக்குழுவுடன் இந்நுாலகங்களை இணைத்து, புதுப்பிக்க வேண்டும்.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், கடந்த, 2006ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகங்கள் திறக்கப்பட்டன.

நுாலக கட்டடத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரம் புத்தகங்கள், அலமாரி வழங்கப்பட்டது.

நுாலகர்களாக சம்பந்தப்பட்ட கிராமங்களில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், மாதத்திற்கு 750 ரூபாய் ஊக்கத்தொகை அடிப்படையில், நியமிக்கப்பட்டனர்.

உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளிலும், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவங்கப்பட்டது. நுாலக வசதியில்லாத கிராம மக்களும், இந்நுாலக வசதியை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், முறையாக சம்பளம் வழங்காதது, புதிய புத்தகம் ஒதுக்கீடு செய்யப்படாதது உட்பட பிரச்னைகளால், முதற்கட்டமாக, 30க்கும் மேற்பட்ட நுாலகங்கள் மூடப்பட்டன.

தற்போது, பெரும்பாலான நுாலகங்கள் பூட்டப்பட்டு, அக்கட்டடங்கள், திறந்த வெளி 'பாராக' பயன்பட்டு வருகின்றன. சில கட்டடங்களை ஊராட்சி நிர்வாகத்தேவைக்காக சிமெண்ட் குடோனாகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

நுாலகத்திலுள்ள புத்தகங்கள், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன. சில கிராமங்களில், கட்டடம் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதமடைந்துள்ளது. இவ்வாறு, இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி வீணாகியுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களை, பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணைக்குழுவுடன் இணைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

பொது நுாலகத்துறையுடன் இணைப்பதால், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களுக்கு, அதிக புத்தகங்களை ஒதுக்கீடாக பெற முடியும். பராமரிப்பு நிதி, நிரந்தர நுாலகர், கழிப்பிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால், பல கிராமங்களுக்கு, நுாலக வசதி கிடைக்கும்.

இது குறித்து, பல முறை கிராம மக்கள் சார்பில், தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us