sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதைப்பொருள் தடுப்பு எப்போது சாத்தியமாகும்?

/

போதைப்பொருள் தடுப்பு எப்போது சாத்தியமாகும்?

போதைப்பொருள் தடுப்பு எப்போது சாத்தியமாகும்?

போதைப்பொருள் தடுப்பு எப்போது சாத்தியமாகும்?


ADDED : ஜூன் 30, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டுதோறும், ஜூன், 26ம் தேதியை, 'போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்' என, ஐ.நா., சபை அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'போதைப்பழக்கத்துக்கு அடிமையாக மாட்டோம்' என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மட்டும் போதைப்பொருட்களை கட்டுக்குள் கொண்டு வந்து விடுமா?

உள்ளாட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

போதைப்பொருள் தடுப்பு தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், 'ஆதாரங்கள் தெளிவாக உள்ளன; தடுப்பில் கவனம் செலுத்துங்கள்' என்பது தான். 'போதை' என்பது சர்வதேசப் பிரச்னையாக இருந்தாலும், துவக்க நிலையில் இருந்து, அதாவது, உள்ளூர் அளவில் இருந்து கிள்ளியெறியப்பட வேண்டும்.

'திருப்பூர் மாவட்ட அளவில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, 78 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது; 21.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, உணவு பாதுகாப்புத்துறை புள்ளி விபரம் தருகிறது.

அதிகாரம் தேவை


இது பாராட்டக்கூடியது என்றாலும், ஒரு குறிப்பிட்ட துறையால் மட்டும், ஒட்டு மொத்தமாக போதைப்பொருள் விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சி முகமை துறையினர் உள்ளிட்ட களப்பணிக்கு செல்லும் ஒவ்வொரு அரசு துறையினரும், தாங்கள் செல்லுமிடத்தில் உள்ள கடைகளில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணித்து தடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால், இத்தகைய பொருட்களின் விற்பனை, பயன்பாட்டை வெகுவாக குறைக்க முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us