sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சிக்கண்ணா'வுக்கு 'பி டபுள் பிளஸ்' ஏன் கிடைக்கவில்லை 'ஏ' கிரேடு?

/

'சிக்கண்ணா'வுக்கு 'பி டபுள் பிளஸ்' ஏன் கிடைக்கவில்லை 'ஏ' கிரேடு?

'சிக்கண்ணா'வுக்கு 'பி டபுள் பிளஸ்' ஏன் கிடைக்கவில்லை 'ஏ' கிரேடு?

'சிக்கண்ணா'வுக்கு 'பி டபுள் பிளஸ்' ஏன் கிடைக்கவில்லை 'ஏ' கிரேடு?


ADDED : ஜூலை 22, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின்(நாக்) 'ஏ' கிரேடு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தது. 'நாக்' குழுவினர் இரண்டு நாட்கள் கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.

ஒரு வாரத்துக்கு பின், நேற்றுமுன்தினம் ஆய்வின் முடிவுகள் குழுவினரால் வெளியிடப்பட்டது. 'பி' அந்தஸ்தில் இருந்த கல்லுாரி, 'பி டபுள் பிளஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், 'அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து, 2029 இறுதியில் 'ஏ' கிரேடுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புஉள்ளது,' என்றார்.

காரணம் என்ன?


'நாக்' குழுவில், நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர். நால்வர் நான்கு குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு பாடப்பிரிவாக அலசி ஆராய்ந்து நாள் முழுதும் ஆய்வு நடத்தினர். ஓரிரு வகுப்புகளில் மட்டுமே 'டிஜிட்டல், 'பவர்பாயின்ட்' பிரசன்டேசன் வகுப்பறை இருந்துள்ளது.

பெரும்பாலானவற்றில் அத்தகைய வசதி இல்லை. இதனால்தான், 'ஏ' கிரேடு கிடைக்காமல், 'பி டபுள் பிளஸ்' தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us