/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி துாய்மைப்பணியாளர் ஊதியம்: ஐகோர்ட் உத்தரவு நடைமுறைக்கு வருமா? போராட்டம் நடத்த கம்யூ., தொழிற்சங்கம் திட்டம்
/
உள்ளாட்சி துாய்மைப்பணியாளர் ஊதியம்: ஐகோர்ட் உத்தரவு நடைமுறைக்கு வருமா? போராட்டம் நடத்த கம்யூ., தொழிற்சங்கம் திட்டம்
உள்ளாட்சி துாய்மைப்பணியாளர் ஊதியம்: ஐகோர்ட் உத்தரவு நடைமுறைக்கு வருமா? போராட்டம் நடத்த கம்யூ., தொழிற்சங்கம் திட்டம்
உள்ளாட்சி துாய்மைப்பணியாளர் ஊதியம்: ஐகோர்ட் உத்தரவு நடைமுறைக்கு வருமா? போராட்டம் நடத்த கம்யூ., தொழிற்சங்கம் திட்டம்
ADDED : ஜூன் 01, 2024 11:14 PM
திருப்பூர்;ஐகோர்ட் உத்தரவு படி, துாய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக, அரசுக்கு அழுத்தம் கொடுக்க, கம்யூ., தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் சார்பில், துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினக்கூலி, 'அவுட்சோர்சிங்' முறையில் குறைக்கப்பட்டிருக்கிறது.
'அரசாணைப்படி, சம்பளம் வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கையை முன்வைத்து, திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், அதன் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், குறைந்தபட்ச ஊதியம் வழங்க உத்தரவிட்டது.
இது குறித்து ரங்கராஜ் கூறியதாவது:
அரசாணை (2டி), 62ன் படி, குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில், நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக, 638 ரூபாய், குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 715 ரூபாய் வழங்க வேண்டும்.
மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, தினசரி சம்பளம், 753 ரூபாய், குடிநீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 792 ரூபாய் சம்பளம் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
ஆனால், இதனைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. அத்துடன், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகையும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையும், தொழிலாளர்களின் பி.எப்., கணக்கில் சரிவர வரவு வைக்கப்படுவதில்லை.
எனவே, ஐகோர்ட் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுபடி, மாநகராட்சி, நகராட்சி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பி.எப்., தொகை மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பங்குத் தொகை வசூலிக்கப்பட்டு, தொழிலாளர்கள் பி.எப்., கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக, அடுத்த மாதம், 11ம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை நகராட்சி கமிஷனர்களிடம் 'ஸ்டிரைக்' நோட்டீஸ் வழங்கியுள்ளோம். தொடர்ந்து, மாநிலம் முழுக்க இக்கோரிக்கை தொடர்பாக அரசின் கவனம் ஈர்க்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.