sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை விரிவாக்கப் பணி விரைவாகுமா?

/

சாலை விரிவாக்கப் பணி விரைவாகுமா?

சாலை விரிவாக்கப் பணி விரைவாகுமா?

சாலை விரிவாக்கப் பணி விரைவாகுமா?


ADDED : ஜூன் 05, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்லடம் அருகே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல்லடம், -மங்கலம் ரோட்டுடன், திருப்பூர் ரோட்டை இணைக்கும் வழித்தடமாக அருள்புரம் ரோடு உள்ளது. பனியன் கம்பெனி வேன்கள், பள்ளி - கல்லுாரி வாகனங்கள் உள்ளிட்டவை, அதிக அளவில் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றன.

வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, 3.20 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சி மூலம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

வாகன ஓட்டிகள் கூறுகையில், ''குறிப்பாக, தனியார் பள்ளி மற்றும் பனியன் கம்பெனி வாகனங்கள் அதிக அளவில் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. மிகவும் குறுகலாக இருந்த இந்த ரோடு, தற்போது நகராட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த பிப்., மாதம் முதல் விரிவாக்கப் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்புக்கு முன் ரோடு விரிவாக்க பணிகள் நிறைவடையும் என எதிர்பார்த்தோம். இருப்பினும், 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

பள்ளிகள் திறப்புக்கு முன் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடித்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us