/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூருக்கு... முதலிடம் கிடைக்குமா? கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
/
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூருக்கு... முதலிடம் கிடைக்குமா? கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூருக்கு... முதலிடம் கிடைக்குமா? கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூருக்கு... முதலிடம் கிடைக்குமா? கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2024 01:25 AM

திருப்பூர்:கடந்த கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், இம்முறை, முதலிடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், கடந்த, 2021 - 2022 ம் கல்வியாண்டில் மாநிலத்தில், ஐந்தாமிடம் பெற்ற திருப்பூர், கடந்த, 2022 - 2023 ம் கல்வியாண்டில் மூன்று இடங்கள் முன்னேறி, இரண்டாமிடம் பெற்றது. 24 ஆயிரத்து, 732 பேர் தேர்வெழுதி, 24 ஆயிரத்து, 185 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்வெழுதியவர்களில், 547 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்று பாராட்டுக்களை பெற்றது.
நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பாடங்களில் சென்டம் பெற உதவிய வகுப்பாசிரியர் உட்பட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் காங்கயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடப்பு 2023 - 2024ம் கல்வியாண்டுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 636 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
சாதனை படைக்குமா?
கடந்தாண்டு இரண்டாமிடம் பெற்றாலும், 2019, 2020 அடுத்தடுத்த ஆண்டுகள் முதலிடம் பெற்று பாராட்டுகளை அள்ளியது, திருப்பூர். 2022 ல், 97.79 சதவீதத்துடன் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், நடப்பு கல்வியாண்டு முதலிடம் பெற்றால், மூன்று முறை பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற புதிய சானையை படைக்க முடியும்.