sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாசன கால்வாய்க்கு கம்பி வேலி திட்டம்! கிடப்பில் போட்டதால் அதிருப்தி

/

பாசன கால்வாய்க்கு கம்பி வேலி திட்டம்! கிடப்பில் போட்டதால் அதிருப்தி

பாசன கால்வாய்க்கு கம்பி வேலி திட்டம்! கிடப்பில் போட்டதால் அதிருப்தி

பாசன கால்வாய்க்கு கம்பி வேலி திட்டம்! கிடப்பில் போட்டதால் அதிருப்தி


ADDED : மே 16, 2024 06:27 AM

Google News

ADDED : மே 16, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பி.ஏ.பி., கால்வாய், குப்பை கொட்டும் பகுதியாக மாறுவதைத்தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில், உள்ளனர்.

பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில், 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் இரண்டாம் மண்டல பாசனத்தில், இந்த கால்வாய் வாயிலாக, 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

இந்த கால்வாயில், போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லுாரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில், அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.

குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால், கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது.

பாசனத்துக்கு, கால்வாயில், தண்ணீர் திறக்கும் போது, இத்தகைய குப்பை, விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. மேலும், பகிர்மான கால்வாய் ஷட்டர்களில், கழிவுகள் தேங்கி, தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன், பொதுப்பணித்துறை சார்பில், அவசர கதியில், உடுமலை கால்வாயில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன.

நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை சார்பில், கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட இடங்களில், கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்கும் அனுப்பபட்டது.

பல ஆண்டுகளாகியும், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். பாசன திட்டத்தை பாதுகாக்க, உடனடியாக அரசு நிதி ஒதுக்கி, நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us