sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு

/

குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு

குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு

குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு


ADDED : ஜூன் 08, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென, தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தொழிலாளர்துறை உத்தரவுப்படி, ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், திருப்பூர் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில், ஆய்வு நடந்து வருகிறது.

உதவி ஆய்வாளர்கள், துணை இயக்குனர்கள், போலீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 'சைல்டு லைன்' பிரதிநிதிகள் அடங்கிய, மாவட்ட தடுப்பு படை, நேற்று ஆய்வு நடத்தியது. கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கட்டுமான பணி நடக்கும் இடங்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. கூட்டாய்வில், ஒரு குழந்தை தொழிலாளர் இருந்தது கண்டறியப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டப்படி, எவ்வித தொழில்களிலும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, பணியாளராக நியமிக்க கூடாது. அபாயகரமான தொழில்களில், வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது குற்றம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us