/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1,000 உரிமைத்தொகை மகளிர் அலைக்கழிப்பு
/
ரூ.1,000 உரிமைத்தொகை மகளிர் அலைக்கழிப்பு
ADDED : அக் 24, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
பயனாளிகள் கூறுகையில், ''மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக, தபால் அலுவலகங்களுக்கு சென்றால், தற்போது பணம் இல்லை என்றும், கைரேகை பதிவு செய்யப்படும் மொபைல்போனுக்கான சர்வர் வேலை செய்யவில்லை என்றும் கூறி, மீண்டும் வருமாறு சொல்லி திருப்பி அனுப்புகின்றனர். கிராமப் பகுதிகளில் இருந்து வரும் பெண்கள், தாய்மார்கள் பலர், அலைக்கழிக்கப்படுகின்றனர். வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவிகள், விடுப்பு எடுத்து வர வேண்டி உள்ளது. மகளிர் உரிமைத்தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும்'' என்றனர்.