ADDED : அக் 16, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கமான கழிவுகளை விட மும்மடங்கு அதிகம் கழிவுகள் சேர்ந்துள்ளன. 17 காம்பாக்டர் வாகனம், 33 டிப்பர் லாரிகள், 4 ஹூக் பின் வாகனம், பேட்டரி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக அனைத்துப் பகுதிகளிலும் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துாய்மைப் பணியாளர்களுக்கு, காலை, 6:00 முதல் இரவு 10:00 மணி வரையில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இரவு வரை, 1,200 மெட்ரிக் டன் எடையளவு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது.