sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

14 பேருக்கு செயற்கை அவயம்

/

14 பேருக்கு செயற்கை அவயம்

14 பேருக்கு செயற்கை அவயம்

14 பேருக்கு செயற்கை அவயம்


ADDED : அக் 13, 2024 11:44 PM

Google News

ADDED : அக் 13, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி ஐ பவுண்டேஷன் மருத்துவக் குழுவினர், 36 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்; ஏழு பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மஸி மூலம், 39 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

கால் அளவீடு செய்யப்பட்ட, 14 பேருக்கு செயற்கை அவயம் நேற்று வழங்கப்பட்டது. சேவா பாரதி மாவட்ட தலைவர் பிரேம்பிரகாஷ் சிக்கா செயற்கை அவயங்களை வழங்கினார். நவ., மாதத்துக்கான செயற்கை அவயம் வழங்க அளவீடு முகாமும் நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us