ADDED : அக் 13, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி ஐ பவுண்டேஷன் மருத்துவக் குழுவினர், 36 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்; ஏழு பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மஸி மூலம், 39 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
கால் அளவீடு செய்யப்பட்ட, 14 பேருக்கு செயற்கை அவயம் நேற்று வழங்கப்பட்டது. சேவா பாரதி மாவட்ட தலைவர் பிரேம்பிரகாஷ் சிக்கா செயற்கை அவயங்களை வழங்கினார். நவ., மாதத்துக்கான செயற்கை அவயம் வழங்க அளவீடு முகாமும் நேற்று நடந்தது.