/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு
/
சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு
ADDED : டிச 13, 2025 07:12 AM
திருப்பூர்: சபரிமலை மண்டல பூஜை துவக்கம் முதல் ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும், அவற்றிலும் முன்பதிவு முடிந்து விடுகிறது.
வாரம் இருமுறை சிறப்பு ரயில் கூடுதலாக அறிவிக்க வேண்டிய நிலை ரயில்வேக்கு உருவாகியுள்ளது. சார்லப்பள்ளி (தெலுங்கானா) - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07121) வரும், 20ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கு, 22ம் தேதி சிறப்பு ரயில் (எண்:07122) இயங்கும். மஹாராஷ்டிரா மாநிலம் நான்டெட் -- கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07123) வரும், 24ம் தேதி இயங்கும்.
மறுமார்க்கமாக, 26ம் தேதி, கொல்லத்தில் இருந்து நான்டெட்டுக்கு சிறப்பு ரயில் (எண்:07124) இயக்கப்படும். இந்த ரயில் போத்தனுார், திருப்பூர் வழியாக ஈரோடு செல்லும்; கோவை ஜங்ஷன் செல்லாதென சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

