/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'
/
உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'
ADDED : அக் 16, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தை சேர்ந்தவர் உதயா, 35. திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள உலகாத்தம்மன் சித்தாயி கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து, 2 ஆயிரத்தை திருடி சென்றார். நல்லுார் போலீசார் உதயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 4 கோர்ட் மாஜிஸ்திரேட் லோகநாதன், உதயாவுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.