ADDED : ஜூன் 16, 2026 03:58 AM
திருப்பூர்; மத்திய அரசின் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்டப் பணிகள் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி ஒருங்கி-ணைப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.
மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமையில் நடந்த இப்பயிற்சியில், துணை கமிஷனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்-பட்டுள்ள 50 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து-கொண்டனர். பொதுமக்களை அணுகும் முறை, படிவங்களை நிரப்புவது மற்றும் விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்து இதில் விளக்கம் அளிக்கப்பட்டது.களப் பணியாளர்கள்: திருப்பூரின் 60 வார்டுகளில் உள்ள 14 லட்சம் மக்களிடம் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 200 குடும்பங்கள் அல்லது 800 பேருக்கு ஒரு கள அலுவலர் வீதம், மொத்தம் 2,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்ப-ணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பயிற்சித் திட்டம்: தற்போது பயிற்சி பெற்றுள்ள 50 ஒருங்கிணைப்பாளர்கள், தங்களின் கீழுள்ள 2,000 களப் பணியாளர்களுக்கு அடுத்ததாகப் பயிற்சி அளிப்பார்கள். காலக்கெடு: இப்பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஜூலை 15 முதல் 31-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்-சியாக, வரும் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் தொடங்கும்.
