sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாவட்ட போலீசுக்கு 'தலைவலி' தந்த 2025

/

 மாவட்ட போலீசுக்கு 'தலைவலி' தந்த 2025

 மாவட்ட போலீசுக்கு 'தலைவலி' தந்த 2025

 மாவட்ட போலீசுக்கு 'தலைவலி' தந்த 2025


ADDED : டிச 28, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட போலீஸ் துறை, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்களை கொண்டுள்ளது. இந்தாண்டு முழுவதும், மாதத்துக்கு ஒரு ஏதாவது சம்பவம் நடந்து மாவட்ட போலீசாருக்கு மனசோர்வை ஏற்படுத்திவந்தது. இதுதவிர, அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை போன்ற பகுதியில் அடிக்கடி நடக்கும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தலைவலியை உண்டாக்கியது.

கடந்த ஆக., மாதம் உடுமலை, குடிமங்கலத்தில் ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், தோட்டத்தில் நடந்த குடும்ப பிரச்னையை விசாரிக்க சென்றபோது, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையால், ஒட்டு மொத்த போலீஸ் உயரதிகாரிகளும் திருப்பூர் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, தந்தை, இரு மகன்களை போலீசார் கைது செய்தனர். மகன் மணிகண்டன் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது, 'என்கவுன்டர்' செய்யப்பட்டார்.

தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பள்ளி தாளாளர் உட்பட, 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு மாதமாக வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. 'சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. பின், ஈரோட்டில் நடந்த தம்பதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட, நான்கு பேர் இவ்வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது.

புத்தாண்டில் குற்றங்களை குறைக்க, தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து திட்டமிட்டு வருகின்றனர். இதுதவிர, கிராமப்புறங்களில் கூடுதல் ரோந்து மேற்கொள்ளுதல், தனியாக வசிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், பின்பற்ற வேண்டியவற்றை குறித்து மாவட்ட போலீசார் தீவிரமாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us