sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள் பள்ளிகளுக்கு வினியோகம்

/

மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள் பள்ளிகளுக்கு வினியோகம்

மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள் பள்ளிகளுக்கு வினியோகம்

மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள் பள்ளிகளுக்கு வினியோகம்


ADDED : ஜூன் 06, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்க, 2.06 லட்சம் சீருடைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் கடந்த 2ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.

மேலும்அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடநுால் மட்டுமின்றி, புத்தகப்பை, கணித உபகரணம், காலனி, பென்சில், வரைபடம், சீருடை உள்ளிட்ட, 14 வகை இலவச பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி திறப்புக்கு பின் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, 2.06 லட்சம் சீருடைகள் தருவிக்கப்பட்டுள்ளன.

இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி குடோனில் இருந்து, தாலுகா வாரியாக பள்ளிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்யும் பணி துவங்கியுள்ளது.

ஒன்று முதல் ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க, மாவட்டத்தில், 13 வட்டார கல்வி அலுவலகங்களுக்கும், 1.60 லட்சம் சீருடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்துச் செல்வர். பள்ளிகல்வித்துறை வாகனம் வாயிலாக சீருடைகள் எடுத்துச்செல்லப்படுகிறது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' முதல் கட்ட தேவைகளுக்கு சீருடை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அட்மிஷன் நடந்து வருகிறது. துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரும் போது எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப கூடுதல் சீருடை இம்மாத இறுதிக்குள் தருவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி பொருட்களின் வாயிலாக, அவர்களின் கல்வி, கற்றல் திறன் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us