sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு

/

மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு

மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு

மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு


ADDED : மே 30, 2025 11:58 PM

Google News

ADDED : மே 30, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட தொழில்மையம் சார்பில், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கார்த்திகை வாசன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்க்கபிரசாத், உதவி மேலாளர் சுரேஷ்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நீட்ஸ் மற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களில், அரசு மானியத்துடன் தொழில் கடன் பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். துவங்க உள்ள தொழில் தொடர்பான திட்ட அறிக்கை, தேவைப்படும் கடன் தொகை, ஆவணங்களை, அதிகாரிகள் குழு பரிசீலனை செய்தனர்.

அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் கடன் கேட்டு 51 பேர் விண்ணப்பித்த நிலையில், நேர்காணலில் 16 பேர் பங்கேற்றனர்; இவர்களில், 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

'நீட்ஸ்' திட்டத்தில், 12 பேர் விண்ணப்பித்த நிலையில், 11 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்; ஒன்பது பேர் கடன் பெற தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us