/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
23ல் பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சு
/
23ல் பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சு
ADDED : பிப் 17, 2026 05:06 AM

அனுப்பர்பாளையம்: பிப். 17-: திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம், 2025 டிச. 31ம் தேதியுடன் காலாவதியானது.
புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் எவர் சில்வர், பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
உரிமையாளர் தரப்பில், பேச்சுவார்த்தைக்கு வராமல் காலம் கடத்தி வந்தனர். இதுகுறித்து, தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் தொழிலா ளர் துறையில் புகார் தெரிவித்தனர்.
மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் பிரேமா நேற்று இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அதில், இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்த ஒப்பு கொண்டனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும், பேச்சுவார்த்தை, 23ம் தேதி காலை நடக்கிறது.

