sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது

/

வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது

வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது

வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது


ADDED : மார் 22, 2026 07:23 AM

Google News

ADDED : மார் 22, 2026 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே சேமலை

கவுண்டன் வலசை சேர்ந்தவர் சாமிநாதன், 46; ஆக்டிங் டிரைவர். தாய் லட்சுமியுடன், 80, வசித்து வந்தார். வெள்ளகோவிலுக்கு நேற்று முன்தினம் காலை சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்-துள்ளார். பின் வெளியே சென்றுள்ளார்.

இரவு, 7:00 மணிக்கு காரில் வந்த சிலர், சாமிநாதனை இறக்கிவிட்டு சென்றனர். நள்ளி-ரவில் இறந்து கிடந்தார். புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில் மூவரை கைது செய்த நிலையில், இருவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வெள்ளகோவிலை சேர்ந்-தவர் சுரேஷ்குமார், 43; தென்னிலையை சேர்ந்தவர் பழனிவேல், 50; இருவரும் சேர்ந்து வெள்ளகோவில் பகுதியில் மனை விற்-பனை, வீடு கட்டி கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். இதற்கான தளவாட பொருட்களை, அந்த இடத்தில் போட்டு வைத்திருந்தனர். இந்த பொருட்களை சாமிநாதன் திருடி சென்று விற்றுள்ளார். இதனால் அவரை அழைத்து சென்று தாக்கியுள்-ளனர்.

பிறகு அவர் திருடிய பொருட்களை பெற்றுக்கொண்டு, காரில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர். பலமாக தாக்கி-யதில் சாமிநாதன் இறந்துள்ளார். இதில் ஈடுபட்ட சுரேஷ்குமார், வெள்ளகோவில் அரவிந்த், 41, சுக்கிட்டிபாளையம் லிங்கேஸ்-வரன், 33, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பழனிவேல், வெள்ளகோவில் கார்த்தி, 33, ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us