sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாசில்தார்களுக்கு 3 ஆண்டு சிறை

/

தாசில்தார்களுக்கு 3 ஆண்டு சிறை

தாசில்தார்களுக்கு 3 ஆண்டு சிறை

தாசில்தார்களுக்கு 3 ஆண்டு சிறை


ADDED : ஏப் 22, 2025 06:18 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. திருப்பூர் பத்திரப்பதிவு ஜாய்ன்ட்-2 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.

அந்த பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ள, முத்திரைத்தாள் தனி தாசில்தார் விஸ்வநாதனிடம் (ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர்) விடுப்பு ஆணை வழங்க கடந்த, 2009 ஜூலை 15ம் தேதி விண்ணப்பித்தார்.

விடுப்பு ஆணை வழங்க விஸ்வநாதன், அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் தாசில்தார் மீன்ராஜன், 80 ஆகியோர் தலா, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

திருமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில், மறுநாள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, இருவரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, கையும் களவுமாக, இருவரை கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us