sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

/

கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 08, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் - பி.என்., ரோடு, சந்தோஷம் லே-அவுட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் சந்தேகப்படும் வகையில், ஐந்து வாலிபர்கள் தங்கியிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.

வடக்கு போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த மூன்று வாலிபர்களிடம் விசாரித்ததில், பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிபிரசாத், 29, பிச்சம்பாளையத்தை சேர்ந்த சார்லஸ் பென்னி, 29 மற்றும் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அருண்குமார், 28 என்பது தெரிந்தது. சோதனையில், பட்டா கத்தி, அரிவாள் என, இரண்டும், ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'வாடகைக்கு எடுத்த வீட்டில் இருவர் மட்டும் தங்கியிருந்தனர். அவ்வப்போது வாலிபர்கள் சிலர் வந்து செல்வது தெரிந்தது. ஐந்து பேர் இருந்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு தகவல் அளித்தனர். சோதனையில், இரண்டு பேர் சென்ற நிலையில், மூன்று பேர் மட்டும் இருந்தனர். அவர்களிடமிருந்து, கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us