sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்; கோவில் நிலம் மீட்பு

/

30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்; கோவில் நிலம் மீட்பு

30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்; கோவில் நிலம் மீட்பு

30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்; கோவில் நிலம் மீட்பு


ADDED : பிப் 18, 2024 01:53 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், முருங்கப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட முருங்கப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது ஊர் மக்கள் மற்றும் கோவில் கமிட்டி சார்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான, கோவிலுக்குப் பின்புறம் உள்ள 2.5 சென்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர் தனது இடத்துடன் சேர்த்து கோவில் நிலத்தையும் ெஷட் அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார்.

இது குறித்து வருவாய் துறையினருக்கு உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஆய்வு செய்த வருவாய் துறையினர், கோவில் நிலத்தைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கினர். உரிய கால அவகாசம் வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

இதையடுத்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். துணை தாசில்தார் பரமேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ், வி.ஏ.ஓ., தேவராஜன் ஆகியோர் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.கோவில் நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பு இடித்து அகற்றி, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த இடம் 30 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும். ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் பாதுகாப்பு செய்து, அறிவிப்பு பலகை வைக்கப்படும். கோவில் பணிக்கு பயன்படுத்தப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us