/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
440 மரக்கன்று நடவு; பசுமை பணிகள் சிறப்பு
/
440 மரக்கன்று நடவு; பசுமை பணிகள் சிறப்பு
ADDED : நவ 23, 2024 11:10 PM

திருப்பூர் மாவட்டத்தில், 'வெற்றி' அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 20.70 லட்சத்தும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றில், 20 லட்சம் கன்றுகள், மரமாக வளர்ந்துள்ளன.
பத்தாவது திட்டம் டிச., மாதம் நிறைவு பெற இருப்பதால், மரக்கன்று நடவு பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மூலனுார் - நத்தப்பாளையம் அடுத்துள்ள ஓலப்பாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பழனிசாமி, கார்முகிலன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 440 மகோகனி மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பழனிசாமி குடும்பத்தினர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.