sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

45 நாள் 'பேமென்ட்' நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை

/

45 நாள் 'பேமென்ட்' நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை

45 நாள் 'பேமென்ட்' நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை

45 நாள் 'பேமென்ட்' நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை


ADDED : பிப் 18, 2024 01:55 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''45 நாள் பேமென்ட் நடைமுறை, குறு, சிறு நிறுவனங்களுக்கு நன்மை விளைவிக்கும்'' என்று கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது.

அகில இந்திய பட்டய கணக்காளர் நிறுவன திருப்பூர் கிளை மற்றும் திருப்பூர் உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கம் (டிக்மா) இணைந்து, பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஐ., பவனில் கருத்தரங்கு நடத்தின.

இதில், சமீபத்தில் வருமான வரி சட்டப்பிரிவு, 43 பி(சி)ன் படி, புதியதாக கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்தும், அதற்கேற்ப தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கருத்தரங்கை, துணை மேயர் பாலசுப்ரமணியம், துவக்கி வைத்தார்.

ஆடிட்டர் பிரபு செந்தில் பேசுகையில், ''குறு மற்றும் சிறு நிறுவனங்களிடம் பெறும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு, 15 நாட்கள் முதல், 45 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் மட்டுமே, அதனை செலவு செய்த ஆண்டின் செலவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு, விற்பனை தொகையை பெறுவதில் உள்ள நடைமுறையை எளிதாக்கும். அதே சமயம், பணம் செலுத்தும் நிறுவனங்களின் நடைமுறை மூலதனத்தின் தேவை அதிகமாகும்,'' என்றார்.பட்டய கணக்காளர் சங்க தலைவர் சரவணராஜா, டிக்மா செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன், தொழில் துறையினர், ஆடிட்டர்கள் பங்கேற்றனர். ஆடிட்டர் சங்க செயலாளர் தருண், நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us