/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் 759 இடங்கள் நிரம்பின
/
கல்லுாரியில் 759 இடங்கள் நிரம்பின
ADDED : ஜூன் 25, 2025 09:54 PM
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில், 759 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவில், 864 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 2ல் துவங்கியது.
சிறப்பு பிரிவு, பொது பிரிவுகளில் இட ஒதுக்கீடு மற்றும் தரவரிசை அடிப்படையில் ஜூன் 9ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளும் நடந்தது.
இறுதியாக தற்போது வரை, 759 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் அரசின் அறிவிப்பு வரும் வரை மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் தொடர்ந்து நடக்கிறது. கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30ம் தேதி துவங்குகிறது. சேர்க்கை குறித்த கூடுதல் தகவல் பெறுவதற்கு கல்லுாரி நிர்வாகத்தை அணுகலாம்.