/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் 85 சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும், நாளையும் 85 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஏப் 25, 2025 11:48 PM
திருப்பூர்: 'பொதுமக்கள் வெளியூர் செல்ல வசதிக்காக, திருப்பூரில் இருந்து இன்றும், நாளையும், 85 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, 35 - 45 பஸ்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக பிற பகுதிகளுக்கு திருப்பூரில் இருந்து இயக்கப்படும்.
நடப்பு வாரம் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் கோடை விடுமுறை அறிவிப்பு, இன்று சிவராத்திரி, நாளை அமாவாசை என்பதால், வாராந்திர சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, 40, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கும்பகோணம் மார்க்கமாக, 25, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 என மொத்தம், 85 பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் தொலைதுார பஸ்களின் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
விபரங்களை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள முன்பதிவு மையத்தில் அறியலாம் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.