sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள்  விழா

/

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள்  விழா

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள்  விழா

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள்  விழா


ADDED : நவ 22, 2024 12:13 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா, திருப்பூரில் கடந்த 19ம் தேதி துவங்கியது. நாளை 23ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட, ஸ்ரீசத்ய சாய்பாபா சேவை அமைப்பு சார்பில், ஸ்ரீசத்ய சாய்பாபாவின், 99வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கடந்த, 19ம் தேதி துவங்கியது. இதையொட்டி நாளை, 23ம் தேதி வரை தினமும் சிறப்பு நகர சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், கடந்த, 19ம் தேதி நாம சங்கீர்த்தனம், சாய் மந்திரில் உழவாரப் பணி மற்றும் மகளிர்க்கான சிறப்பு யோகாசன பயிற்சி; சிறப்பு ஆலோசனை மற்றும் மங்கள ஆரத்தி ஆகியன நடந்தது.

நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சாய் பஜன் மற்றும் ஆசிரியர் ரம்யாவின் சொற்பொழிவு ஆகியன நடந்தது. நேற்று இளைஞர்கள் பங்கேற்ற சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு ஆகியன நடந்தது. இதில், லிங்கராஜன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோர் பேசினர்.

விழாவில், இன்று காலை 9:30 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சியும் தொடர்ந்து நாராயண சேவைக்கான ஆயத்தப் பணிகளும் நடைெபறும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், நகர சங்கீர்த்தனம், கணபதி ேஹாமம், பிரசாந்தி கொடியேற்றம் மற்றும் சாய் பஜன் நடைபெறும். காலை 11:00 மணி முதல் சிறப்பு நாராயண சேவையும், மாலை 4:45 மணிக்கு, 1008 சகஸ்ர நாம பாராயணம்; ஸ்வாமி அழைப்பு, சாய் பஜன் மற்றும் சொற்பொழிவ.

அதனை தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தியும் நடக்கிறது. வரும், 24ம் தேதி, காலை 9:00 மணிக்கு அகண்ட நாம பஜன் மற்றும் ரத்த தான முகாம் ஆகியன நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பினர் செய்துள்ளனர்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.






      Dinamalar
      Follow us