sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி

/

காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி

காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி

காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி


ADDED : நவ 21, 2024 09:29 PM

Google News

ADDED : நவ 21, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பராமரிப்பில்லாமல், வீணாகி வருகிறது.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, 300க்கும் மேற்பட்ட பஸ்களும், பல ஆயிரக்கணக்கான பயணியரும் வந்து செல்கின்றனர்.

பயணியர் குடிநீர் வசதிக்காக, நகராட்சி சார்பில், திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டது. ஆனால், முறையாக அதனை பராமரிக்காததால், பழுதடைந்து காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இப்பகுதியில், குப்பை கொட்டப்பட்டும், எச்சில் துப்பும் இடமாக மாற்றப்பட்டு, துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.

பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணியர், குடிநீருக்கு அலையும் நிலை உள்ளது. மேலும், கழிப்பிடம், இருக்கை என அடிப்படை வசதிகளும் இல்லை. பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us