sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மங்களமாக ஒலித்த... நாதஸ்வரம் 'நம்ம ஊரு திருவிழா'வில் 'செம' கலக்கல்

/

மங்களமாக ஒலித்த... நாதஸ்வரம் 'நம்ம ஊரு திருவிழா'வில் 'செம' கலக்கல்

மங்களமாக ஒலித்த... நாதஸ்வரம் 'நம்ம ஊரு திருவிழா'வில் 'செம' கலக்கல்

மங்களமாக ஒலித்த... நாதஸ்வரம் 'நம்ம ஊரு திருவிழா'வில் 'செம' கலக்கல்


ADDED : மார் 22, 2025 11:07 PM

Google News

ADDED : மார் 22, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்ம ஊர் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு கலைஞர்களுக்கான நேர்காணல், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடைபெற்றது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், நம்ம ஊரு திருவிழா நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்க ஏதுவாக, கலைக்குழுக்கள் தேர்வு செய்ய, மாவட்டம் தோறும் நேர்காணல் நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்ட அளவிலான நேர்காணல், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது. முதல் நாளான நேற்று, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பம்பை இசை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு ஆகிய கலைக்குழுவினருக்கு நேற்று நேர்காணல் நடந்தது.

நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர், கலைக்குழுவின் திறமைகளை ஆய்வு செய்தனர். மொத்தம், 11 குழுக்களை சேர்ந்த, 102 பேர் நேற்றைய நேர்காணலில் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று, தெருக்கூத்து, இசைநாடகம் உள்ளிட்ட கலைகளுக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

தேர்வு செய்யப்படும் குழுவினர், எட்டு மாவட்டங்களில் நடக்க உள்ள 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். அந்நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்பவர்கள், 2026ல் சென்னையில் நடக்கும் சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 95664 73769 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us