sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுஞ்சோலையாகும் நெடுஞ்சாலை!

/

பசுஞ்சோலையாகும் நெடுஞ்சாலை!

பசுஞ்சோலையாகும் நெடுஞ்சாலை!

பசுஞ்சோலையாகும் நெடுஞ்சாலை!


ADDED : அக் 30, 2024 12:11 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசியில், கால்நடை மருத்துவமனை முன் குப்பை மேடாக இருந்த நெடுஞ்சாலைத்துறை காலியிடத்தில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இப்பகுதியில், தமிழக அரசின் கால்நடை மருத்துவமனை, வணிகவரித்துறை ஆகிய அரசு சார்ந்த அலுவலங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில், சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து பல ஆண்டுகளாக கொட்டி வந்தனர். அதனை அவ்வப்போது தீ வைத்து சிலர் எரித்து விடுவதும் உண்டு.

அந்த சமயத்தில், புகை மண்டலம் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். அதேபோல், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி முன், நெடுஞ்சாலைத்துறையினரின் இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தரணிதரன் கூறுகையில், ''நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை மற்றும் மழைப்பொழிவை தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

அவ்வகையில், இதுவரை 250 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். மீதமுள்ள இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us