ADDED : அக் 28, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில் இருந்து பொம்மநாயக்கன்பட்டி வழியாக வீதம்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டை அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டில், உப்பாறு மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது.
ஓடையில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இணைப்பு ரோட்டில், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே, ஓடையின் மீது, உயர் மட்ட பாலம் கட்ட, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.