sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்

/

சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்

சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்

சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்


ADDED : நவ 01, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 01, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், நஞ்சராயன் குளத்துக்கு, உள்நாட்டு பறவையினங்கள் மட்டுமின்றி ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சேன்ட் பைபர், கிரீன் ஹெரான், யூரேசியன் பார்பில், கிரேவாக் டெய்லர், டார்டர், ஸ்பூன்பில், கார்க்கினி, கூழைக்கிடா உள்ளிட்ட பல்வேறு பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருகின்றன.

அதிக உயரத்தில் பறக்கும் பட்டைத்தலை வாத்துகள், குளிர் காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள, இங்கு வலசை வருவது வழக்கம். இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:

பொதுவாகவே, குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுப்பப்படும் சத்தம், மனிதர்களுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும் உகந்தது அல்ல. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் அடையாளமாக, பல்லுயிர் சூழல் பெருக்கத்தின் ஒரு அங்கமாக வாழும் ஏராளமான பறவையினங்கள், நஞ்சராயன் குளத்துக்கு வந்து செல்கின்றன.

தீபாவளி சமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசு சத்தம், பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும்; இதனால் அவை அங்கிருந்த பறந்து செல்லவோ, மீண்டும் வராமலே போகவும் கூட வாய்ப்புண்டு.

எனவே, சுற்றியுள்ள மக்கள் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஆண்டுதோறும் ஏற்படுத்தி வருகிறோம்.

அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும் இதை நன்கு உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.

கிராம மக்கள் ஆதங்கம்

பல்லடம் அடுத்த, ஆறாக்குளம் கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.அவர்கள் கூறுகையில், ''விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ள இப்பகுதியில், சுற்றுச்சூழல் சீர்கெடுவதையும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு, பத்து ஆண்டுகளாக நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும் இப்பகுதியில் புதிதாக குடியேறியவர்கள் சிலர், பட்டாசு வெடித்தபடி தீபாவளியை கொண்டாடுகின்றனர். புதிதாக குடியேறியவர்களிடமும் இது குறித்து அறிவுறுத்தி வருகிறோம். பட்டாசு இல்லாத தீபாவளியை இந்த முறை கொண்டாட இயலவில்லை என்பது வருத்தமே'' என்றனர்.



'வெடிக்கு பதில் செடி'

பல்லடம் 'வனம்' அமைப்பு ஒவ்வொரு தீபாவளி பண்டிகைகளின் போதும், காற்று மாசை தடுக்கும் வகையில், பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி வருகிறது. இதை முன்னிறுத்தும் விதமாக, இந்தாண்டு 'வெடிக்கு பதில் செடி' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் வனம் அமைப்பு வெளியிட்டது.








      Dinamalar
      Follow us