sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'

/

'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'

'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'

'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'


ADDED : ஜூன் 19, 2025 04:58 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச மாத ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டுமென, அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.

எல்.பி.எப்., அகில இந்திய தலைவர் நடராஜன், ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ரங்கராஜன், எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி, எம்.எல்.எப்., மாநில செயலாளர் கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்சம் மாதம், 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நிதி ஒதுக்க வேண்டும். விவசாய தொழிலாளர் பயன்பெறும் வகையில், வேலை உறுதி திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9ல் நடைபெற உள்ள தேசிய அளவிலான பொது வேலை நிறுத்த போராட்டத்தை, வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us