sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குன்றாத குப்பை 'மலை'; பாவம்... மக்கள் நிலை

/

குன்றாத குப்பை 'மலை'; பாவம்... மக்கள் நிலை

குன்றாத குப்பை 'மலை'; பாவம்... மக்கள் நிலை

குன்றாத குப்பை 'மலை'; பாவம்... மக்கள் நிலை


ADDED : ஜூன் 19, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கு காணினும் குப்பைமயம்


மருதாசலபுரம் மெயின் வீதி, எல்.ஜி., மைதானத்தில் குப்பைகள் வழிநெடுக நிறைந்து காணப்படுகிறது. சுகாதாரம் பேண வேண்டும்.

- மகிழ், மருதாசலபுரம்.

24வது வார்டு, நாகத்தம்மன் கோவில் வீதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ரோட்டில் தேங்கும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ரவிக்குமார், நாகத்தம்மன் கோவில் வீதி.

ஓம்சக்தி கோவில் வீதி, எம்.பி., நகரில் வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.

-- தினேஷ், எம்.பி., நகர்.

காலேஜ் ரோடு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டி நிறைந்துள்ளது. குப்பை எடுக்க வேண்டும்.

- கார்த்திகேயன், காலேஜ் ரோடு.

58வது வார்டு, பழனியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ரோட்டோரத்தில் குப்பை நிறைந்துள்ளது.

- குரு, பழனியாண்டவர் நகர்.

பலவஞ்சிபாளையம், மூகாம்பிகை நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பை வாங்க மாநகராட்சி ஊழியர் வருவதில்லை. திறந்த வெளியில் கொட்டும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- காயத்ரி, மூகாம்பிகை நகர்.

அள்ளாமல் விடலாமா?


பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - மீனம்பாறை ரோட்டில் குப்பை அள்ளாமல் அப்படியே விட்டுள்ளனர். குப்பைகளை நாய்கள் இழுத்து ரோட்டுக்கு கொண்டு வந்து விடுகிறது.

- செல்வராஜ், நொச்சிபாளையம்.

அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு


திருப்பூர், நல்லுார் - பலவஞ்சிபாளையம் ரிங்ரோட்டில் ரோட்டோர ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.

- மகேஷ், பலவஞ்சிபாளையம்.

சிக்னல் பழுது


திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி நால்ரோட்டில் சிக்னல் அடிக்கடி பழுதாகிறது. குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.

- சிவகுமார், வீரபாண்டி.

தண்ணீர் வீண்


திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவு முன்புறம் உள்ள குடிநீர் குழாய் வால்வு உடைந்துள்ளது. தண்ணீர் வீணாகிறது.

- கனகராஜ், கண்டியன்கோவில்.

பல்லாங்குழி சாலை


ராக்கியாபாளையத்தில் இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். தார் சாலை அமைக்க வேண்டும்.

- பாபுதரன், ராக்கியபாளையம்.

போக்குவரத்து இடையூறு


திருப்பூர், காந்தி நகர் - ஈஸ்வரன் நகர் இணைப்பு சாலையில் கனரக வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுவதால், இடையூறு ஏற்படுகிறது. பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்.

- வின்ரோஸ்,

காந்தி நகர்.

ஒளிராத விளக்கு


திருப்பூர், 12வது வார்டு, அண்ணா வீதி, மகாலட்சுமி நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- முபாரக் பாட்ஷா, அண்ணா வீதி.

குழியான சாலை


நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் ஸ்டாப்பில், தார் சாலை சேதமாகி, குழியாகியுள்ளது. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.

-- கார்த்திக் சாமிநாதன், தோட்டத்துப்பாளையம்.

சகிக்க இயலா துர்நாற்றம்


திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள உள்ள உயர்மட்ட பாலத்தின் கீழ் பலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர்; துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.

- குட்டி, அவிநாசி.

இதற்கா தடுப்பு வேலி!


கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில் கொட்டிய குப்பையை அள்ளாமல், அப்படியே துணி கட்டி தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.

- செல்வராஜ், மீனாம்பாறை.






      Dinamalar
      Follow us