sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!

/

சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!

சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!

சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!


ADDED : ஏப் 14, 2025 11:28 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் தேக்கம்

திருப்பூர், 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தும் போதெல்லாம், வழிந்தோட வழியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

- பிரியங்கா, அமர்ஜோதி கார்டன்.

திருப்பூர், 25வது வார்டு, பாட்டையப்பன் நகர் மெயின் வீதியில் ரோடு வசதி முறையாக இல்லை. மழை பெய்தால், வாகனங்கள் செல்ல வழியின்றி அதிகளவில் மழைநீர் தேங்கி விடுகிறது. விரிவான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

- நடராஜ், பாட்டையப்பன் நகர்.

கால்வாய் அடைப்பு

திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் முதல் நல்லாறு வரை மழைநீர் வடிகால்கள் மண் சேர்ந்து மூடிய நிலையில் உள்ளது. மண் அள்ளி, அடைப்புகளை அகற்ற வேண்டும்.

- வெங்கடாச்சலம், போயம்பாளையம்.

கால்வாய் அடைப்பு

திருப்பூர், ஆண்டிபாளையம், முல்லை நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- பார்த்தி, முல்லை நகர்.

பல்லாங்குழி சாலை

குப்பாண்டம்பாளையம் கடைசி வீதியில், ரோடு போட வேண்டும். சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- சரவணன், குப்பாண்டம்பாளையம்.

திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியில்லை. புதர் மண்டி காணப்படுகிறது.

- சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர்.

மின்கம்பம் சேதம்

திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை பின்புறம் கோபால் நகர் ஐந்து வீதியில் மின்கம்பம் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

- ஷியாம், கோபால் நகர்.

நாய்த்தொல்லை

திருப்பூர், சாமுண்டிபுரம், அமர்ஜோதி வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- பவித்ரா, அமர்ஜோதி வீதி.

ஒளிராத விளக்கு

திருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டனில் தெருவிளக்குகள், 15 நாட்களாக எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய தெருவிளக்கு பொருத்த வேண்டும்.

- தங்கப்பன், வி.ஜி.வி., கார்டன்.

முத்தண்ணம்பாளையம் - நல்லுார் ரோடு, பொன்முத்து நகர் மூன்றாவது வீதியில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை.

- செந்தில்குமார், முத்தணம்பாளையம்.






      Dinamalar
      Follow us