/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!
/
சாலையில் 'குளம்'; எப்போது வற்றுமோ!
ADDED : ஏப் 14, 2025 11:28 PM

மழைநீர் தேக்கம்
திருப்பூர், 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தும் போதெல்லாம், வழிந்தோட வழியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.
- பிரியங்கா, அமர்ஜோதி கார்டன்.
திருப்பூர், 25வது வார்டு, பாட்டையப்பன் நகர் மெயின் வீதியில் ரோடு வசதி முறையாக இல்லை. மழை பெய்தால், வாகனங்கள் செல்ல வழியின்றி அதிகளவில் மழைநீர் தேங்கி விடுகிறது. விரிவான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
- நடராஜ், பாட்டையப்பன் நகர்.
கால்வாய் அடைப்பு
திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் முதல் நல்லாறு வரை மழைநீர் வடிகால்கள் மண் சேர்ந்து மூடிய நிலையில் உள்ளது. மண் அள்ளி, அடைப்புகளை அகற்ற வேண்டும்.
- வெங்கடாச்சலம், போயம்பாளையம்.
கால்வாய் அடைப்பு
திருப்பூர், ஆண்டிபாளையம், முல்லை நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- பார்த்தி, முல்லை நகர்.
பல்லாங்குழி சாலை
குப்பாண்டம்பாளையம் கடைசி வீதியில், ரோடு போட வேண்டும். சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- சரவணன், குப்பாண்டம்பாளையம்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியில்லை. புதர் மண்டி காணப்படுகிறது.
- சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர்.
மின்கம்பம் சேதம்
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை பின்புறம் கோபால் நகர் ஐந்து வீதியில் மின்கம்பம் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
- ஷியாம், கோபால் நகர்.
நாய்த்தொல்லை
திருப்பூர், சாமுண்டிபுரம், அமர்ஜோதி வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- பவித்ரா, அமர்ஜோதி வீதி.
ஒளிராத விளக்கு
திருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டனில் தெருவிளக்குகள், 15 நாட்களாக எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய தெருவிளக்கு பொருத்த வேண்டும்.
- தங்கப்பன், வி.ஜி.வி., கார்டன்.
முத்தண்ணம்பாளையம் - நல்லுார் ரோடு, பொன்முத்து நகர் மூன்றாவது வீதியில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை.
- செந்தில்குமார், முத்தணம்பாளையம்.