sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு!திருப்பூரில் ஓய்வெடுத்த சாலைகள்

/

பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு!திருப்பூரில் ஓய்வெடுத்த சாலைகள்

பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு!திருப்பூரில் ஓய்வெடுத்த சாலைகள்

பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு!திருப்பூரில் ஓய்வெடுத்த சாலைகள்


ADDED : ஜன 16, 2024 02:45 AM

Google News

ADDED : ஜன 16, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் கள் பொங்கல் பண் டிகைக்காக சற்றே ஓய்வெடுத்துள்ளனர்.

உழைக்கும் பண்பினை போற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில், பொங்கல் வைத்து, குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்விடுமுறை காரணமாக, பொங்கல் கொண்டாடியதும், வெளியே ஜாலியாக சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டனர்.

தொடர்விடுமுறை காரணமாக, தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சென்று விட்டனர். பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், வடமாநில தொழிலாளர்களும் நேற்று வெளியே

தலைகாட்டவில்லை. பனியன் நிறுவனங்களில், பொங்கல் வைத்து

கொண்டாடினர்.

இதனால், நேற்று பகல் நேரத்தில், திருப்பூரின் முக்கிய ரோடுகள், வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பொது அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், குடியிருப்போர் நலசங்கங்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள்

கலகலப்பாக நடந்தன.

திருப்பூர், அவிநாசி உட்படல பல பகுதியில், போலீசார் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 திருப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில், பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பங்கேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக, பெண் போலீசார் பொங்கல் வைத்தனர்.

 அவிநாசி போலீஸ் குடியிருப்பில், பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, திருப்பூர் எஸ்.பி., சாமிநாதன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜான்சன், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.






      Dinamalar
      Follow us