ADDED : ஜன 16, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தபால் துறையுடன் இணைந்து, சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வரும் 19 முதல் 21ம் தேதி வரை, சாமளாபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
புதிதாக ஆதார் பதிவு செய்தல்; 5 முதல் 15 வயது சிறுவர்களுக்கு கண் விழி, கைவிரல் ரேகை பதிவு ஆகியன இலவசம். முகவரி, பெயர், மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களுக்கு 75 ரூபாய்; போட்டோ மற்றும் பயோ மெட்ரிக் புதுப்பிக்க 125 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

