sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்களுக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை

/

தேர்களுக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை

தேர்களுக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை

தேர்களுக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை


ADDED : ஏப் 11, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர் திருவிழாவையொட்டி, நேற்று தேர் அலங்காரப் பணிக்காக பெரிய தேர் மற்றும் அம்மன் தேருக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை நடந்தது.

கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறியதாவது: சித்திரைத் தேர்த்திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சியும், 2ம் தேதி மாலை சூரிய சந்திர மண்டல காட்சி, 3ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்னபட்சி வாகன காட்சிகள், 4ம் தேதி கைலாச வாகனம் புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகிறது. 5ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தல் மற்றும் புறப்பாடு, 6ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறுகிறது.

மே 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளல், 8ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 9ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் தேர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்கள் வடம் பிடித்தல் மற்றும் மாலையில் வண்டித்தாரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம், 13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர் மயில் வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

தேர் அலங்கரிப்பு பணிக்காக, தேர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். ஓரிரு நாட்களில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கும்.

பக்தர்களுக்கு அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆயக்கால் பூஜையில் அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதாமணி மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us