ADDED : பிப் 19, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சேர்ந்தவர் கலா, 44; நில தரகர்.
ஈரோடு - பழநி ரோடு காங்கயம் வழியாக காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து, இவரைகடத்தியது. படியூர் அருகே அறையில் அடைத்துவைத்து ஐந்து லட்சம் ரூபாய், நகைகளை கும்பல் பறித்தது. கடத்தல் தொடர்பாக, பரமத்தி வேலுாரை சேர்ந்த சுதா, 43 உட்பட 5 பேரை காங்கயம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று,முத்துாரை சேர்ந்த செந்தில், 30; திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் வாண்டையார், 40 என, இருவரை கைது செய்தனர்.

