/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றித்திரியும் கால்நடை; கட்டுப்படுத்த அதிரடி
/
சுற்றித்திரியும் கால்நடை; கட்டுப்படுத்த அதிரடி
ADDED : அக் 02, 2025 08:48 PM
உடுமலை:திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் சார்பில், ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகரின் பிரதான ரோடுகளில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளும் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
எனவே, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடைத்துறையினர் இணைந்து, விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில், சுற்றித்திரியும் கால்நடைகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிராணிகள் வதை தடுப்புச்சங்கத்தன் சார்பில், உடுமலை, காங்கயம், தாராபுரம் கால்நடை மருத்துவமனைகள், அவிநாசி கால்நடை மருந்தகம் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ரோடுகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், ஆடு, மாடு, எருது ஆகியவற்றை, வாகனங்களில் கொண்டு செல்லும் போது, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதுகுறித்து உரிமையாளரிடம் அறிவுறுத்தி, கட்டுப்படுத்த வேண்டும்.
நோய் பாதிப்பாலும், மக்களாலும் தெருநாய்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அவற்றை மீட்டு காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். செல்லப்பிராணிகள் விற்கும் விற்பனையகங்கள், விலங்கு நலவாரியத்தில் உரிமம் பெற்று இயங்க அறிவுறுத்த வேண்டும்.
வளர்ப்பு நாய்கள் துன்புறுத்துவது தெரியவந்தால், அவற்றை மீட்டு, அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களில் சேர்க்க வேண்டும்.
கால்நடைத்துறை சார்பில், நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.