ADDED : ஜன 24, 2026 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்தும், இதன் வழியாகவும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் செல்லும் நிலை உள்ளது. இதில் மாணவர்களும், மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும்.

