ADDED : மார் 10, 2026 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவின் கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

