ADDED : ஏப் 13, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் நகரங்கள், கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும்.
