sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் பணியிடம்: பணியாளர் சங்கம் கோரிக்கை

/

கூடுதல் பணியிடம்: பணியாளர் சங்கம் கோரிக்கை

கூடுதல் பணியிடம்: பணியாளர் சங்கம் கோரிக்கை

கூடுதல் பணியிடம்: பணியாளர் சங்கம் கோரிக்கை


ADDED : ஆக 29, 2025 09:38 PM

Google News

ADDED : ஆக 29, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; வேலை உறுதி திட்டத்துக்கு, ஒன்றிய நிர்வாகங்களில், தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் பொன்னையாவிடம் வழங்கிய மனு:

தமிழகத்திலுள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, வேலைப்பளுவை குறைத்து, பதவி உயர்வு வழங்க வேண்டும்.

7வது ஊதியக்குழுவில், தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊதியத்துக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊதியத்துக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

வேலை உறுதி திட்டத்துக்கு ஒன்றிய நிர்வாகங்களில், தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் 'ஜல் ஜீவன்'; தமிழக அரசின், 'கனவு இல்லம்' திட்டங்களுக்கு தனிப்பிரிவு உருவாக்கி பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us